/* */

திருச்சி: தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தோட்டக்கலை பயிர்களை இ-அடங்கலில் காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி: தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
X

கோப்பு படம்

இது தொடர்பாக, திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும், தங்கள் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலம் தாங்கள் பயிரிட்டுள்ள தோட்டக்கலை பயிர்களை, இ-அடங்கலில் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வரும் காலங்களில் அதிக கனமழை கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்த வாழை, வெங்காயம், மரவள்ளி மற்றும் மிளகாய் (வற்றல்) போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு, பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22-ம் ஆண்டு ராபீ பருவத்திற்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்.

வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 -ந் தேதி வரையும், வெங்காய பயிருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மற்றும் மிளகாய் (வற்றல்) பயிருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு வெங்காய பயிருக்கு ரூ.1,978, வாழைக்கு ரூ.3,238, மரவள்ளி பயிருக்கு ரூ.1,528, மற்றும் மிளகாய் (வற்றல்) பயிருக்கு, ரூ.1,120-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’