/* */

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் துறையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

துறையூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர். 

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு, நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் சார்பில், பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சி நகர தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். துறையூர் நகர செயலாளர் செந்தில்நாதன், மாநில பரப்புரையாளர் சரவணன், தொகுதி செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பரப்புரையாளர் சரவணன் கலந்துகொண்டு, தமிழகத்தில் பெட்ரோல் டீசல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றத்தையும் இதனால் பாதிக்கப்படும் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான காய்கறிகள் ,அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை ஏற்றத்தையும் குறித்து விளக்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, அரசு எதிராக கோஷமிட்டனர். கட்சியின் துறையூர் தொகுதி இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Updated On: 24 July 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!