/* */

முற்றுகை போராட்டம் காரணமாக திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது

முற்றுகை போராட்டம் காரணமாக கலெக்டர் உத்தரவின் பேரில் திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

HIGHLIGHTS

முற்றுகை போராட்டம் காரணமாக திருச்சியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது
X

திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டாஸ்மாக் கடை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போராட்ட களத்திற்கு திருச்சி கிழக்கு தாசில்தார் நேரில் வருகை தந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, டைபி மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ், பகுதி செயலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?