/* */

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம் துவக்கம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமினை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம் துவக்கம்
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்களை தேடி மாநகராட்சி என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு பயனாளி ஒருவருக்கு ஆணை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் ஸ்ரீரங்கம் தேவி மஹாலில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இம்முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி பெயர் மாற்றம் ,சர்வே வரைபட நகல் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், நகரப் பொறியாளர் (பொறுப்பு)பி. சிவபாதம் செயற்பொறியாளர்கள் ஜி .குமரேசன் , கே.பாலசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் மண்டல குழு தலைவர் ஆண்டாள் ராம்குமார்,ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ரவி, மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் க. வைரமணி, மாமன்ற உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2022 10:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?