/* */

திருச்சி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீ குளித்து தற்கொலை

திருச்சி அருகே குடும்ப தகராறில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீ குளித்து தற்கொலை
X

கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பிரியா.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சத்திரப்பட்டி ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல இன்றும் சண்டை நடந்துள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரியா தனது உடம்பில் அடுப்பு எரிய ஊற்றப்படும் எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும் அருகில்இருந்த குழந்தையை கட்டியணைத்து இருக்கிறார். இதில் சம்பவஇடத்திலேயே பிரியாவும், அவரது இரண்டரை வயது குழந்தையும் உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை செய்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி