/* */

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கிற்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கிற்கு போலீஸ் வலைவீச்சு
X

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள மேக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்கிற பெரியசாமி. இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், பின்னர் அவருடைய வீட்டிற்கு தெரியாமல் கடந்த மாதம் ஆர்.டி.மலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிய வரவே, அவர்களது ஆலோ சனையின்பேரில் மணிகண்டம் ஊர்நல அதிகாரி சுந்தரி, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார், பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்த தகவலறிந்த பெரியசாமி தப்பி ஓடி, தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்ததாக பெரியசாமியின் பெற்றோர் கனகராஜ், லெட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?