Begin typing your search above and press return to search.
திருச்சி முக்கொம்பு கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுமான பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தின் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.378 கோடியில் புதிய கதவணை கட்டுமான பணி நடந்து வருகிறது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று முக்கொம்புக்கு சென்று கதவணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். விரைவில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் சிறப்பு அதிகாரி கீதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.