/* */

திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்த 600 மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 600 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே குடோனில் பதுக்கி வைத்த 600 மது பாட்டில்கள் பறிமுதல்
X

மது பாட்டில்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த கண்ணனூர் அருகே சிலர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் கண்ணனூர் சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது கண்ணனூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு குடோனில் 600 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்த குற்றத்திற்காக துறையூர் மணிமாறன், திருத்தலையூர் வேலுச்சாமி, செளந்தரராஜன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து முசிறி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 25 Jan 2022 1:05 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?