/* */

மணப்பாறை அருகே கோவில் விழா பிரச்சினையில் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்

மணப்பாறை அருகே கோவில் விழா தகராறில் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

மணப்பாறை அருகே கோவில் விழா பிரச்சினையில் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்
X

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள நல்லூர் ஊராட்சித் தலைவராக சின்னக்காளை என்பவர் இருந்து வருகிறார். இவர் பில்லுப்பட்டியில் கோவில் திருவிழா நடத்துவது சம்மந்தமாக நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பிடாரப்பட்டி அழகர்சாமி, சுப்பையா, தங்கராசுஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன்,உள்ளிட்ட 4 பேருக்கும், சின்னக்காளைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஊராட்சித் தலைவரின் தலையில் தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த சின்னக்காளையை மீட்டு அருகில் இருந்தவர்கள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இதுபோல் சங்கன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சின்னக்காளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  4. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  5. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  8. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  9. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...