/* */

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாதயாத்திரை சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
X

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 51). தனியார் நிறுவன ஊழியரான இவர் சமயபுரம் கோவில் செல்வதற்காக புள்ளம்பாடியில் இருந்து நம்பர் 1 டோல்கேட்டிற்கு பஸ்சில் வந்தார். பின்னர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாருதி நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மொபட்டில் வந்த, லால்குடி அருகே உள்ள பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் பிரேம்குமார் (வயது 20), முருகன் மகன் விஜய் என்கிற மாணிக்கம் (வயது 20) உள்பட 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி சந்துருவிடம் இருந்த ரூ.2 ஆயிரத்து 700 மற்றும் ஒரு செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பிரேம்குமார், மாணிக்கம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் வெங்கடேஷ் (வயது 20) என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்