/* */

வையம்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு

தி.மு.க. ஒன்றிய கவுன்சில் வேட்பாளருக்கு ஆதரவாக வையம்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

வையம்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு
X

வையம்பட்டியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம் செய்தார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அக்டோபர் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக செல்லமணி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிராமம், கிராமமாக வாக்கு சேகரித்தார். அமயபுரம், மலையடிப்பட்டி, சரவணம்பட்டி, இனாம் கோவில்பட்டி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமைச்சருடன் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என். சேகரன், வையம்பட்டி ஒன்றியத் தலைவர் குணசேகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

Updated On: 7 Oct 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு