/* */

குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பதாக புகார்

திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

HIGHLIGHTS

குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பதாக புகார்
X

பைல் படம்

திருச்சி மாவட்டம் வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சிறுகாம்பூர், குருவம்படட்டி ஆகிய பகுதிகளில் அரசு மதுபானக்கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆமூர், குணசீலம், கொடுந்துறை, துடையூர், சித்தாம்பூர், கல்லூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வயல், வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குடும்ப தலைவர்கள் அதிகாலையிலேயே வாங்கி குடித்துவிட்டு சீரழியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மதுகுடிப்பவர்களால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து சம்பந்தப்பட்ட வாத்தலை போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சட்டவிரோத மதுபாட்டில் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 9 Dec 2021 10:01 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  2. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  3. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  4. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  8. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  9. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு