/* */

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருச்சி சிறுகனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X

திருச்சி அருகே தீப்பிடித்து எரிந்த கார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் ராகேஷ்( வயது 24). இந்த குடும்பத்தினர் காரில் சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்னையிலிருந்து திண்டுக்கல் செல்வதற்காக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த காரில் இரண்டு குழந்தைகள் மற்றும் நான்கு பெரியவர்கள் இருந்தனர். இந்த கார் இன்று காலை திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த சனமங்கலம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார். காரில் இருந்த குழந்தைகள் உள்பட ஆறு பேரும் கீழே இறங்கினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வந்து அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துவிட்டது. எந்திர கோளாறு காரணமாக கார் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி சிறுகனூர் போலீசார் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் அடிப்படையில்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 29 March 2022 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!