இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவருக்கு சான்றிதழ்
சாத்தமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் சாத்தமங்கலம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இதில் சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கனகராஜ் மகன் மதன்குமார் வயது (27) இவரின் போட்டி வேட்பாளராக ஆனந்திமேட்டில் வசிக்கும் மகாலிங்கம் மனைவி கவிதா ஆகிய இருவரும் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக களத்தில் போட்டியிட்டனர்.
சாத்தமங்கலம் ஊராட்சியில் 1173 ஆண் வாக்காளர்களும் 1216 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் உள்பட மொத்தம் 2390 வாக்காளர்களில் 1755 பேர் வாக்களித்தனர். இதில் மதன் குமாருக்கு 1096 வாக்குகளும் கவிதாவிற்கு 629 வாக்குகளும் கிடைத்தது. செல்லாத வாக்குகள் 30 என அறிவிக்கப்பட்டது.
இதில் மதன்குமார் 467 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் அரியூர் ஊராட்சியில் 1-வது வார்டு இடைத்தேர்தலில் மொத்தம் 213 வாக்குகள் பதிவாகின. மதியழகன் 138 வாக்குகளும் நாராயணன் 68 வாக்குகளும் பெற்றனர். செல்லதத வாக்கு ஏழு என அறிவிக்கப்பட்டது. இதில் மதியழகன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு லால்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெசிந்தா மற்றும் ரவிச்சந்திரன் சான்றிதழை வழங்கினர்.