/* */

சுகாதார பணியாளர் சானிடைசர் குடித்து தற்கொலை

திருச்சி அருகே சுகாதார பணியாளர் குடும்ப தகராறில் சானிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சுகாதார பணியாளர் சானிடைசர் குடித்து தற்கொலை
X

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் அந்தநல்லூர் ஊராட்சியில் தற்காலிக சுகாதார பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், முருகேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். நேற்று காலை மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் இருந்த கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்க கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...