/* */

சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்

சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்
X

திருச்சியில் சொத்து தகராறில் தந்தையை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால்(81). இவருக்கு கிருஷ்ணவேணி, கீதா, ஹேமா, பிரேமா என்ற நான்கு மகள்களும், ரவி, பிரபோத சந்திரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஐந்து பேர் திருமணமாகி பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக வசிக்கின்றனர்.நந்தகோபால் தனது நான்காவது மகன் பிரபோத சந்திரன் என்பவருடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். திருமணமாகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட பிரபோத சந்திரன் திருச்சி தனியார் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று நந்தகோபாலின் பேத்திக்கு சென்னையில் நடைபெறும் பூப்புனித நீராட்டு விழா தொடர்பாக நேற்று இரவு தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியும், சொத்தில் பாகம் கேட்டும் தந்தை நந்தகோபாலிடம் தகராறில் ஈடுபட்ட பிரபோத சந்திரன் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில், வீட்டிலிருந்த குழவிக் கல்லை எடுத்து தந்தையின் முன்னந்தலையில் அடித்துள்ளார். இதில் கீழே விழுந்த நந்தகோபால் பின்னந்தலையிலும் அடிபட்டு மரணம் அடைந்துள்ளார்.இதனைக் கண்ட மகன் பிரபோத சந்திரன் தனது தந்தையை தானே அடித்துக் கொலை செய்து விட்டதாக திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி, பிரபோத சந்திரனை கைது செய்துள்ளனர்.

Updated On: 25 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...