/* */

எட்டயபுரம் சந்தையில் 4 கோடி ரூபாய் அளவில் விற்பனையான ஆடுகள் -வியாபாரிகள் மகிழ்ச்சி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சுமார் 4 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

HIGHLIGHTS

எட்டயபுரம் சந்தையில் 4 கோடி ரூபாய் அளவில் விற்பனையான ஆடுகள் -வியாபாரிகள் மகிழ்ச்சி
X

தென்மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் விரும்பும் இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல், விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை, சென்னை, நெல்லை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும் பொது மக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் சராசரியாக 2,000 முதல் 3,000 ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு இருந்த ஆட்டுச்சந்தை கடந்தவாரம் மீண்டும் திறக்கப்பட்டது. முதல்வாரம் என்பதால் விற்பனை சுமராக இருந்தது. இந்நிலையில் வரும் புதன் கிழமை என்பதாலும், எட்டயபுரம் ஆட்டுச்சந்தை மீண்டும் வழக்கமான சூழ்நிலையில் களை கட்டியது. பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்து.

சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேல் கிடாய் ஆடுகள் தான் அதிகமாக காணப்பட்டது. கடந்த 1ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சரி வர சந்தைகள் நடைபெறவில்லை என்பதால், ஆடுகள் வளர்ச்சி அதிகமாக இருந்தது. சாதரணமாக 15 கிலோ முதல் 40 கிலோ வரையிலான ஆடுகளும், ஆளின் இடுப்புளவு உயரமுள்ள கிடாரி ஆடுகளும் விற்பனைக்கு வந்து இருந்தன. கடந்த வாரத்தினை விட பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிடாய் ஆடுகளை தான் பொது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கினர். 15 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிர ரூபாய் வரை கிடாரி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

பொட்டு,மயிலை, நாடு, செம்மறி என கிடாய் ஆடுகளை அதிகளவில் பொது மக்கள் வாங்கி சென்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கொரோனா பாதிப்பு மற்றும் ஆடுகளில் விலை உயர்வு காரணமாக விற்பனை மந்தமாக தான் இருந்தது. ஆனால் கடந்த வாரத்தினை இந்த வாரம் ஆடுகள் வரத்தும், விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக காலையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது விற்பனையாகி விடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு சற்று மந்தமாகவே விற்பனை தொடங்கியது. சுமார் 4 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

கடந்த வாரத்தினை விட இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், பக்ரீத், ஆடி என்பதால் ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்ததாகவும், பக்ரீத் பண்டிகை புதன் கிழமை என்பதால் செம்மறி கிடாய்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாகவும், ஒரு கிடாய் ஆடு 40ஆயிரம் வரை விலை போனதாகவும், கடந்த வாரத்தினை விட இது அதிகம் என்பதால் மகிழ்ச்சி என்றும், தான் 30 ஆடுகள் வரை கொண்டு வந்து விற்பனை செய்துள்ளதாகவும், தனக்கு ரூ 5லட்சம் வரை லாபம் கிடைத்துள்ளதாக கூறுகிறார் சிவகாசியை சேர்ந்த ஆட்டு வியாபாரி சந்திர சூரியன்.

Updated On: 17 July 2021 6:18 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...