/* */

தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் ரூ. 8 கோடி மோசடி: இருவர் கைது

தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் 8 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் ரூ. 8 கோடி மோசடி: இருவர் கைது
X

பைல் படம்.

தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த பிரின்ஸ் மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (47) என்பவர் சிமெண்ட், உப்பு மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த நளராஜ் மகன் சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி தான் உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், ஸ்டேன்லி சாம்ராஜூடன் சேர்ந்து வியாபாரம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

சீலன் செல்வராஜ்

மேலும், சீலன் செல்வராஜ் அவருடன் வியாபாரம் செய்துவரும் தூத்துக்குடியை சேர்ந்த கேசவமூர்த்தி மகன் விஜய் என்பவரையும் ஸ்டேன்லி சாம்ராஜுக்கு அறிமுகப்படுத்தி, சீலன் செல்வராஜ் மற்றும் விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்தில் உப்பு, இரும்புபொருட்கள் வாங்கப் போவதாக போலியான கொள்முதல் ஆணையை காண்பித்து நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.

பின்னர், அவருடைய வங்கி கணக்குகளில் இருந்து 2020 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை 8 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 741 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு எந்தவித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றி உள்ளளர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்டேன்லி சாம்ராஜ் கடந்த 22.02.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.

விஜய்

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மோசடி செய்ததாக சீலன் செல்வராஜ் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 April 2023 3:13 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு