/* */

சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி அஞ்சலி
X

தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004 ஆம் டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்தில் நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக பாதிப்புகளை சுனாமி பேரலை ஏற்படுத்தியது. அந்த தீரா வடுக்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 26 ஆம் தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெற்ற‌ அஞ்சலி நிகழ்ச்சியில் ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் அண்ணா சங்கு குளி மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி கடல் மாதா சாந்தி அடைய கடலில் மலர் தூவி பாலூற்றி வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீண்டு வர வேண்டியும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், மீனவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Dec 2023 5:01 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!