/* */

தூத்துக்குடியில் காவல் துறை சார்பில் 2 விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில், இரண்டு விழிப்புணர்வு குறும்படங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் காவல் துறை சார்பில் 2 விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீடு
X

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களிடையே வீடுகள் மற்றும் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட "மூன்றாம் கண்" என்ற குறும்படத்தையும், சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "அல்வா" என்ற குறும்படத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டார்.


தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியது:

விழிப்புணர்வு குறும்படங்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இடையூறாக இருப்பது அறியாமை, ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டு அதன் பின் அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்தால் அவர்கள் நிச்சயமாக எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டார்கள்.

எனவே, குற்றச் செயலில் ஈடுபட்டால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பகள் என்ன என்பதை பொதுமக்கள் கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும், வாழ்க்கையில் நான் பெரியவர், நீ பெரியவர் என்று போட்டி போடுவதை விட அவர்களிடம் அன்புடனும் சகோதரத்துவத்துடனும் பழகி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போய் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இதனால் தேவையற்ற சண்டை, சச்சரவுகளை தவிர்த்து நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி முன்னேற முடியும். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் பொது மக்களிடையே "மாற்றத்தை தேடி" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


அந்த நிகழ்ச்சி மூலம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவரும் ஜாதி மத பேதம் இன்றி ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் இருக்க வேண்டி தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

மேலும், மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமரா மூலம் நடந்த குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கவும், சிசிடிவி கேமரா உள்ள பகுதிகளில் குற்றங்கள் நடவாமல் தடுக்கவும் முடிகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். அதன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மூன்றாம் கண் குறும்படம் அமைந்துள்ளது என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட கலையுலக தொழில்நுட்பம் மற்றும் நடிகர்கள் சங்க தலைவர் சாம்ராஜ், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், வழக்கறிஞர் செங்குட்டுவன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Feb 2023 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா