Begin typing your search above and press return to search.
தூத்துக்குடியில் 23-ந்தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஏற்பாட்டின்படி தூத்துக்குடி டூவிபுரம் 8வது தெருவில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வருகிற 23ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் காலை 10.00 மணி முதல் 2 மணி வரை (குடும்ப அட்டை) ஸ்மார்ட் கார்டுகளில் புகைப்பட மாற்றம், செல்போன் நம்பர் மாற்றம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.