/* */

ஆதரவின்றி நின்ற மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார்

தூத்துக்குடியில் ஆதரவின்றி தெருவில் நின்ற 88 வயது மூதாட்டியை போலீஸார் மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

ஆதரவின்றி நின்ற மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார்
X

தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் ஆதரவின்றி தெருவில் நின்ற 88 வயது மூதாட்டியை போலீஸார் மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் முதியவர்கள், மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே ஆதரவின்றி தனியாக சுற்றி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (08.04.2023) இரவு தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக தெர்மல்நகர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் செல்வின்ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர் அங்கு இருந்த மூதாட்டியை மீட்டு அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். பின்னர், அந்த மூதாட்டியிடம் பெயர் மற்றும் முகவரி விசாரித்ததில் அவர் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜே.எஸ் நகரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (88) என்பதும் அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து உடனடியாக தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் செல்வின்ராஜா முத்தையாபுரம் தனிப்பிரிவு காவலர் ஜான்சனை தொடர்பு கொண்டு மூதாட்டி குறித்த தகவலை கூறி விசாரணை செய்தாராம். விசாரணையில், மூதாட்டி ஜே.எஸ் நகரில் உள்ள அவரது மகன் சுந்தரவேலு வீட்டில் இருந்து தன்னிச்சையாக வெளியே வந்து முத்துநகர் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் செல்வின்ராஜா ஒரு ஆட்டோ மூலம் மூதாட்டி பொன்னம்மாளை பத்திரமாக மீட்டு தனிப்பிரிவு காவலர் ஜான்சனுடன் ஜே.எஸ் நகரில் உள்ள அவரது மகன் சுந்தரவேலு வீட்டிற்கு அழைத்து சென்று அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

ஆதரவின்றி தெருவில் சுற்றித்திரிந்த 88 வயது மூதாட்டியை பத்திரமாக மீட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த தனிப்பிரிவு காவலர்கள் செல்வின்ராஜா, மற்றும் ஜான்சன் ஆகிய இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 9 April 2023 1:44 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  5. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  7. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  8. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  9. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  10. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...