/* */

தூத்துக்குடியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

முகநூல் மூலம் பழகி தூத்துக்குடி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த திருமங்கலம் வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது
X

மதுரை மாவட்டம், திருமங்கலம் சவுக்கத்அலி தெருவைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா மகன் அப்சல்கான் (32), இவருக்கு முகநூல் மூலம் தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அச்சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம்.இதனிடையே மகளை காணவில்லை என்று கூறி சிறுமியின் தாயார் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற அப்சல்கானை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 17 April 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்