தூத்துக்குடியில் சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது
முகநூல் மூலம் பழகி தூத்துக்குடி சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த திருமங்கலம் வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், திருமங்கலம் சவுக்கத்அலி தெருவைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா மகன் அப்சல்கான் (32), இவருக்கு முகநூல் மூலம் தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அச்சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம்.இதனிடையே மகளை காணவில்லை என்று கூறி சிறுமியின் தாயார் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற அப்சல்கானை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.