/* */

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்,4 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்,4 பேர் கைது
X

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த விராலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் விராலி மஞ்சளுக்கு மிக தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்துள்ள கோவளம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவற்காக விராலி மஞ்சள் லாரி மூலமாக கொண்டு செல்லப்பட்டு கடல் வழியாக கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் சென்ற போது லாரி சாலையில் சிக்கியதால் பிடிபட்டது.

இதனைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்த போலீசார், லாரியிலிருந்து மஞ்சள் தூள் 1.5 டன், விராலி மஞ்சள் 2.820 கிலோ, ஏலக்காய் 125 கிலோ மற்றும் சிகரெட் தாள் 125 பெட்டி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், சாயல்குடியை சார்ந்த சுப்பிரமணியம், சாயர்புரத்தை சார்ந்த ஜெபமணி, அரிச்சந்திரன் உள்ளிட்ட நால்வரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Jan 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  2. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  3. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  6. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  7. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  8. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  9. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  10. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...