/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஆய்வு
X

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரல் பாலத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளும், நிவாரணப் பணிகளும் மற்றும் கணக்கெடுப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும், கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்பட்டு, ஒரு சில இடங்களில் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து, தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நோய்த்தடுப்பு சிகிச்சை வழங்குவதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிகனமழையின் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு பகுதியில் மருதூர் மேல் கால்வாய் பக்கப்பட்டி வழியாக செல்லும் பாசனக் கால்வாயில் அதிக நீர்வரத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து, சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், பெருங்குளம் பேரூராட்சி கீழமங்கலக்குறிச்சியில் முழுவதும் சேதமான வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அங்குள்ள கோயிலுக்கு மண்டபம் கட்ட நிதியுதவியை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.


ஏரல் பகுதியில் பாதிக்கப்பட்ட வணிக பெருமக்களை சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஏரல் மேம்பாலத்தை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.

ஏரல் பேரூராட்சியில் உள்ள ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கி இருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்கினார். ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் வாழவள்ளான் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, பொதுமக்களை சந்தித்து, சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் உதயநிதி பெற்றார்.

Updated On: 25 Dec 2023 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’