/* */

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக லட்சுமிபதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி பொறுப்பேற்பு
X

தூத்துக்குடி மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக லட்சுமிபதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த செந்தில்ராஜ் அண்மையில் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையெடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார். அவது பொறுப்பை கூடுதல் ஆட்சியரான சுபம் ஞானதேவ் ராவிடம் ஒப்படைத்து சென்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட செந்தில்ராஜிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது பணிக்காலத்தில் ஏராளமான திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வந்ததாக பாராட்டும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசுப் பணியில் பணியிட மாற்றம் என்பது தவிர்க்க முடிாயது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியது பெருமைகா உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட லட்சுமபதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக லட்சுமிபதி தற்போது பொறுப்பேற்றுள்ளார். அப்போது, கூடுதல் ஆட்சியர் சுபம் ஞானதேவ் ராவ், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் லட்சுமபதி இதற்கு முன்பு செங்கல்பட்டு சார் ஆட்சியராக பதவி வகித்து வந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு லட்சமபதி கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நல்ல நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

Updated On: 20 Oct 2023 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு