/* */

கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை
X

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை செய்தனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்துவது உண்டு. அதன்படி, நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் வித்தியாசமான முறையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடபப்பட்டது. அப்போது, மாணவிகள் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பள்ளி ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வம், செயலாளர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் தின சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுக பெருமாள், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், ஆசியா பார்ம்ஸ்பாபு, நாராயணசாமி, பாபு, ரோட்டரி சங்க இணை செயலாளர் ராஜமாணிக்கம், வீராச்சாமி, மாரியப்பன், பூல்பாண்டி, பழனிக்குமார் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.

Updated On: 5 Sep 2023 12:26 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  6. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  7. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  9. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  10. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!