/* */

கோவில்பட்டியில் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறையாக கால்நடை பராமரிப்பு கடன் வழங்காததை கண்டித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
X

கோவில்பட்டி வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரதம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக திமுக மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பீக்கிலிப்பட்டி முருகேசன் ஒருதலை பட்சமாக செயல்படுவாதகவும், கால்நடை பராமரிப்பு கடனை சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், கடன் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கு கூட்டுறவு சங்க செயலாளர் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், வரதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், ஒருதலைபட்சமாக செயல்படும் வரதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது, கால்நடை பராமரிப்பு கடன் கேட்டு விண்ணப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். பாகுபாடின்றி கடனுதவி வழங்க வேண்டும். கடன் வழங்கும் விவகாரத்தில் முறையின்றி செயல்படும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், 90 ஆயிரம் கடன்தொகை பெற ரூ. 5 ஆயிரம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் கடன் வழங்குவதில் பாகுபாடு பார்க்கும் செயலில் ஈடுபட்டால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 5 May 2023 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  3. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  6. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  7. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  8. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  9. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  10. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!