/* */

எட்டையாபுரம் ஆட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்: விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் பகுதி ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் வியாபாரம் விற்பனை குறைவு.

HIGHLIGHTS

எட்டையாபுரம் ஆட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்: விவசாயிகள் கவலை
X

எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் மழையின் காரணமாக வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றது.

கோவில்பட்டி அருகே தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் மழையின் காரணமாக வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றது.

தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக விளங்கக் கூடிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச்சந்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறுவது வழக்கம். இதில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் சந்தையில் தங்கள் ஆடுகளை விற்பதற்கும், வாங்கி செல்வதற்கும் வருகின்றனர். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ரம்ஜான் 10 நாட்களே உள்ள நிலையில் வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

காலையிலிருந்து பெய்து வந்த சற்று சாரல் மழையின் காரணமாக வியாபாரத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. வழக்கமாக 2000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகும். இன்று நடந்த சந்தையில் 1000 ஆடுகளே விற்பனை ஆகின. இதனால் 1.25 கோடி ரூபாய் அளவிலான வியாபாரம் நடைபெற்றது. வழக்கமான நாட்களில் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையிலும் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி செல்ல வந்தபோது மழையின் காரணமாக விற்பனை பாதித்ததால் சற்று கவலையுடன் சென்றனர்.

Updated On: 23 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!