/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் மீது ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 18.03.2023 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் வைத்து தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி (27) மற்றும் சிலரை வடபாகம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கருப்பசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 04.06.2022 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி இந்திராநகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா எண்ணெய் விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த அஜன் (25) மற்றும் சிலரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்த 5 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஜன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 07.03.2023 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே இருசக்கர வாகனத்தில வந்துகொண்டிருந்த தெய்வச்செயல்புரம் டாஸ்மாக் மேற்பார்வையாளரான ஸ்ரீவைகுண்டம் அணியாபரநல்லூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (50) என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து அவரை தாக்கி அவர் வைத்திருந்த ரூபாய் 1,90,070/- பணத்தை சிலர் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த வழக்கில் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23), தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த மாரிமுத்து (24) மற்றும் சிலரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறி வழக்கில் கைதான மணிகண்டன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பபு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, ஆட்சியர் செந்தில்ராஜ் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி, தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த அஜன், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த மாரிமுத்து ஆகிய நான்கு பேரும் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 13 April 2023 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?