/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல அனுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல அனுமதி
X

தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் இலங்கை அதனை ஒட்டிய கடல் பகுதி மன்னார் வளைகுடா கடல் பகுதி குமரி கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் சுழல் காற்று ஆனது 45 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை வேகத்தில் வீசக்கூடும் என்றும் கடல் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 16 ஆம் தேதி அறிவித்தது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகள் ஆகியவற்றை பத்திரமாக உயரமான இடத்தில் நிறுத்தி வைக்கவும் மீன்பிடி சாதனங்களை பத்திரமாக வைக்க உத்தரவிடப்பட்டது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நாளை (டிசம்பர் 27) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒருவாரத்துக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.

Updated On: 26 Dec 2023 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?