/* */

BC மற்றும் MBC பிரிவினருக்கு அரசு வழங்கும் கடனுதவி திட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

BC மற்றும் MBC பிரிவினருக்கு  அரசு வழங்கும் கடனுதவி திட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தில் தனிநபருக்கு அதிக பட்சமாக ரூ. 15 லட்சம் வரையில், ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையில் கடன் வழங்கப்படும்.

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் அதிக பட்சமாக ரூ. 2 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். நுண்கடன் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையிலும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையிலும் மகளிருக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகித்திலும் ஆண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிக பட்சமாக 20 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கறவை மாட்டுக் கடன் திட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ. 60,000 வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

இதேபோல, இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு, சுய தொழில் தொடங்க கடன் திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீதம் மற்றும் ரூ. 5.00 லட்சத்திற்கு மேல் 8 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்சமாக ரூ. 10 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும்.

மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்ட திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீதம் மற்றும் ரூ. 5 லட்சத்திற்கு மேல் 8 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்சமாக ரூ. 10 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும்.

சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறு கடன் திட்டத்தில் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை கடன் வழங்கப்படும். சிறு குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர்பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் ரூ. 50,000 வரை அரசால் வழங்கப்படும்.

இந்த கடனுதவி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

கடனுதவிக்கு விண்ணப்பம் செய்வோர் சாதிச் சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி மற்றும் திட்டதொழில் அறிக்கை (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டிருப்பின்) ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்று, உரிய சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் தூத்துக்குடி இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

வெண்மைப் புரட்சி ஏற்படுத்தும் வகையில் கறவை மாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இந்தக் கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொருளாரதாரத்தை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 29 Sep 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்