/* */

ரூல்கர்வ் முறைப்படி ஏன் 141 அடி நீரைத் தேக்கவில்லை: தமிழக விவசாயிகள் அதிருப்தி

ரூல்கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணையில் 141 அடி தண்ணீர் தேக்கவில்லை என ஐந்து மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பினர்

HIGHLIGHTS

ரூல்கர்வ் முறைப்படி ஏன்  141 அடி நீரைத் தேக்கவில்லை: தமிழக விவசாயிகள் அதிருப்தி
X

முல்லை பெரியாறு அணை பைல் படம்

முல்லைபெரியாறு அணையில் ரூல்கர்வ் முறைப்படி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே 141 அடி நீர் தேக்கியிருக்க வேண்டும். அதனை ஏன் செய்யவில்லை என விவசாயிகள் காட்டத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையி்ல் ரூல்கர்வ் முறை அமலுக்கு வந்ததை காரணம் காட்டி தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கடந்த மாதம் 29ம் தேதி கேரள அமைச்சர்கள் கேரளா வழியாக தண்ணீர் திறக்க அனுமதித்தனர்.

கடந்த ஒரு வாரமாக கேரளா வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதே ரூல்கர்வ் முறைப்படி மூன்று நாட்களுக்கு முன்பே முல்லை பெரியாறு அணையில் 141 அடி நீர் தேக்கியிருக்க வேண்டும். ஏன் இதுவரை 141 அடி நீரை தேக்கவில்லை. அடுத்து நாம் 142 அடிநீரை தேக்க நவம்பர் 30ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அணையில் 141 அடி நீரை தேக்கிய பின்னர் தினமும் ஒரு பாயிண்ட் வீதம் நீர் மட்டத்தை உயர்த்திக் கொண்டே வந்து, நவம்பர் 30ம் தேதி அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியும்.

நீரை திறந்து விட மட்டும் ரூல்கர்வ் முறையினை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், அதே ரூல்கர்வ் முறைப்படி தண்ணீரை தேக்கியிருந்தால் நம் உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கும். 141 அடி தண்ணீர் தேக்க உரிமை கிடைத்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தேக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  8. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  10. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...