/* */

66 அடியை தாண்டியது வைகை அணை: இன்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர் மட்டம் 66 அடியை கடந்துள்ளது. நீர் வரத்து அதிகம் இருப்பதால் இன்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

HIGHLIGHTS

66 அடியை தாண்டியது வைகை அணை: இன்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
X

வைகை அணை நீர் மட்டம் அறுபத்திஆறு அடியை தாண்டி உள்ளது.

வைகை அணை 66 அடியை தாண்டி உள்ளதால் இன்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 4168 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 969 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதாலும், நீர் வரத்து அதிகம் இருப்பதாலும் அணை இன்று மாலை அல்லது இரவு 67 அடியை எட்டும். உடனே முதல் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி போடியில் 55.6 மி.மீ., வீரபாண்டியில் 35 மி.மீ., பெரியகுளத்தில் 45 மி.மீ., சோத்துப்பாறையில் 30 மி.மீ., தேக்கடியில் 16.4 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Updated On: 6 Nov 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!