/* */

தேனி : பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் திருட்டு- பொதுமக்கள் அவதி

மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடி தண்ணீர் திருடப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி : பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் திருட்டு- பொதுமக்கள் அவதி
X

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடிதண்ணீர் திருடப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போடிமெட்டு மலை கிராமம், தர்மத்துப்பட்டி, ரெங்கநாதபுரம், கீழச்சொக்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளாக உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்குத்தெருவில் சிலர் குடிநீர் வினியோகம் செய்யும் கேட்வால்வை தாங்களாகவே திறந்து கொண்டு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் தடையின்றி கிடைத்து வருகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் போதிய அளவு குடிதண்ணீர் இல்லாததால் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக குடிநீர் திருடும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பொது மக்களின் பயன்பாட்டுக்காக நாள்தோறும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Jun 2021 3:18 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!