/* */

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..!

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே..  உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..!
X

பள்ளிகளில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள்.

தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர்கள் விடுத்திருக்கும் வேண்டுகோளில் கூறப்பட்டிருப்பதாவது: நாம் செல்லும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அப்பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் மற்றும் பல நல் உள்ளங்களால் அப்பள்ளியின் உட்புற வெளிப்புற சுவரிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் பல வண்ண ஓவியங்களும், பாடத்தொடர்புடைய படைப்புகளும் கற்றல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் எழுதப்பட்டிருக்கும்.

அவற்றின் மீது வேட்பாளர்களின் சின்னங்களை பசைகொண்டு ஒட்டி அவர்களின் உழைப்பை பாழாக்கி விடாதீர்கள். மாறாக செல்லோடேப் கொண்டு ஒட்டுங்கள் அல்லது எதுவும் எழுதப்படாத பகுதியில் அதை ஒட்டுங்கள். ஒருநாள் தானே நமக்கென்ன என்று அந்த உழைப்பில் ஒட்டி அதை சிதைக்க வேண்டாம்.


ஏனெனில், அதை உருவாக்க அவர்கள் எத்தனை நாள் கஷ்டப்பட்டிருப்பர் என்று அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து அந்த வகுப்பறையை வாக்குச்சாவடியாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உழைப்பை பார்ப்போம்.நீண்ட சணல் கயிறு கட்டி அதில் சுவரொட்டிகள் தொங்கவிடுங்கள்..

தேர்தல் சுவரொட்டிகள் ஒருநாள் பயன்பாட்டிற்கு மட்டுமே, பள்ளிச் சுவரோவியங்கள் பல ஆண்டுகள் கற்றல் பணிக்கும் பள்ளி மழலை மாணவச் செல்வங்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்...

SMART CLASSROOM அமைய உள்ள பள்ளிகள் நமது பள்ளிகள் என்பதனை பெருமையுடன் உணர்வோம் நாம். நன்றியுடன் , ஆசிரியர்கள், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 April 2024 6:17 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...