தேனி அருகே கடன் தொல்லையால் தாய், மகள் உயிரிழப்பு- மகன் சீரியஸ்
Crime News Tamil - வருஷநாட்டில் கடன் தொல்லையால் விஷம் குடித்து தாய், மகள் உயிரிழந்தனர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
HIGHLIGHTS
Crime News Tamil - வருஷநாட்டில் கடன் தொல்லையால் விஷம் குடித்து தாய், மகள் உயிரிழந்தனர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தேனி மாவட்டம், வருஷநாடு சின்னசாந்திபுரத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி ஆண்டிச்சி (வயது 35.) இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது. காவியா,( 17, )கிருஷ்ணக்குமார், (15 )என்ற குழந்தைகள் உள்ளனர். கடன் தொல்லையால் நல்லுச்சாமி குடும்பத்தை விட்டு வெளியேறி ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இந்நிலையில் குழந்தைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்ட ஆண்டிச்சி, தனது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து வி்ட்டு தானும் குடித்தார். இதில் ஆண்டிச்சி, காவியா இருவரும் இறந்தனர். கிருஷ்ணகுமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வருஷநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2