/* */

வாகனப்பேரணி: களம் இறங்கும் ஐந்து மாவட்ட தமிழக விவசாய சங்கங்கள்

தேனி மாவட்டத்தில் ஐந்த மாவட்ட விவசாய சங்கங்கள் நடத்தும் இருசக்கர வாகன பேரணியில் பல விவசாய சங்கங்கள் பங்கேற்கவுள்ளன

HIGHLIGHTS

வாகனப்பேரணி: களம் இறங்கும்  ஐந்து மாவட்ட தமிழக விவசாய சங்கங்கள்
X

முல்லை பெரியாறு அணை பைல் படம்

தேனி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் இருசக்கர வாகன பேரணியில் தமிழகத்தில் உள்ள அத்தனை விவசாய சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையினை காப்போம், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 5ம் தேதி நடத்த உள்ள இருசக்கர வாகன பேரணியில், தமிழகத்தில் உள்ள அத்தனை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிலை உருவாகி வருகிறது.

தமிழ்நாடு கள் இயக்கத்தின் நிறுவனர் நல்லசாமி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச்செயலாளர் சிதம்பரம், ரவீந்திரன் உட்பட பலர் டிசம்பர் 5ம் தேதி பேரணியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். இன்னும் பல சங்க நிர்வாகிகள் தங்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் புறப்படுகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்களே பலரை பங்கேற்க வேண்டாம் என்றும், அதிக கூட்டம் கூடினால் அமைதிப் பேரணி திசை மாறி விடும் என்றும், கட்டுப்பாடாக சிலர் மட்டும் வாருங்கள் என வேண்டுகோள் விடுத்து வருவதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 28 Nov 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...