/* */

உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் சாலையில் வழக்குரைஞர் வெட்டிக்கொலை

உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் வக்கீல் ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

உத்தமபாளையத்தில்  பட்டப்பகலில் சாலையில்  வழக்குரைஞர் வெட்டிக்கொலை
X

பைல் படம்

உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வழக்குரைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கூடலூர் சுக்கான்கல்பட்டியை சேர்ந்தவர் வழக்குரைஞர்ல் மதன் (37). இவர் இன்று முற்பகல் உத்தமபாளையம் கோர்ட்டில் இருந்து, தனது கட்சிக்காரர் ஒருவரை டூ விலரில் ஏற்றிக் கொண்டு உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கம்பம் - தேனி சாலையில், பொதுப்பணித்துறை பயணியர் விடுதி அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஒரு கார், டூ வீலர் மீது மோதியது. அப்போது டூவீலரில் வந்த இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

அந்த நேரத்தில் காரில் இருந்து இறங்கிய இருவர் வழக்குரைஞர் மதனை கோடாரியால் வெட்டினர். நிலை குலைந்த வழக்குரைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருடன் வந்தவரும் கீழே விழுந்ததில் காயமடைந்தார். மதன் இறந்ததை உறுதிப்படுத்திய பின்ன,ர் மர்ம கும்பல் காரில் தப்பிச்சென்றது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் போலீசார், மதன் உடலை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை