/* */

தேனியில் மீண்டும் கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் மீண்டும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ, சுகாதாரத்துறைகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.

HIGHLIGHTS

தேனியில் மீண்டும் கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அதிர்ச்சி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தவிர 60 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு விட்டனர். வெகுசிலர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் தேனி மாவட்டத்தில் கொரோனா மிகுந்த கட்டுப்பாடுகளுடன் தான் இருந்தது.

இரண்டாம் அலை முடிந்த பின்னர் தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ச்சியாக 125 நாட்களுக்கும் மேல் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 34 பேர் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. இதில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேனி மாவட்ட நிர்வாகமும், மருத்துவ, சுகாதாரத்துறைகளும் அதிர்ச்சியில் உள்ளன. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Updated On: 19 Jun 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்