/* */

நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு

கூடலுாரில் குடிநீர் திட்ட கட்டுமானப்பணிகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் கூடலுார் விவசாயிகள் முறையீடு
X
கூடலுார் வந்த நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம், கூடலுார் முல்லைப்பெரியாற்றில் வண்ணான்துறையில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மாற்று வழிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பணை கட்டும் பணிகளை பார்வையிட, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, மதுரை மாநகராட்சி கமிஷனர், மதுரை மாநகராட்சி நிர்வாக பொறியாளர், பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கூடலுார் நகராட்சி அதிகாரிகள் இன்று வண்ணான்துறை வந்தனர். அங்கு இருந்த பாரதீய கிஷான் விவசாய சங்க தேனி மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ்பாபு, கூடலுார் முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன் உட்பட விவசாயிகள் அவர்களிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் இந்த திட்டத்தை தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும். இன்னும் 15 ஆண்டுகள் கழித்து ஏற்படும் தேவையினை கணக்கில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் 15 ஆண்டுகள் கழித்து தேவை அதிகரிக்கும். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர்.

Updated On: 19 Jun 2022 3:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...