/* */

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சினிமாவுக்கு அனுமதி:நகராட்சி அதிரடி

கேரளாவில் பரவல் குறையாமல் இருப்பதால், கூடலுாரில் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்   மட்டுமே சினிமாவுக்கு அனுமதி:நகராட்சி அதிரடி
X
கூடலுார் சினிமா தியேட்டர்கள் முன் நகராட்சி நிர்வாகம் வைத்துள்ள பிளக்ஸ்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றுகளை காட்டினால் மட்டுமே சினிமா தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும் என நகாட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து கூடலுார் நகராட்சி நிர்வாகம் தியேட்டர்கள் முன்பாக பிளக்ஸ்களை வைத்துள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான சான்று அல்லது மொபைல் மெசேஜ் காட்டினால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். தியேட்டருக்குள் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்யும் சானிடைசரை தியேட்டர் நிர்வாகம் தயாராக வைத்து, சுத்தம் செய்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேனி மாவட்டத்தில் கேரளாவுடன் மிகவும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள நகராட்சி கூடலுார் மட்டுமே. இங்குள்ள மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தினமும் அல்லது அடிக்கடி கேரளா சென்று வருகின்றனர். கூடலுார் நகராட்சியின் கடைசி வார்டும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், குமுளி பஞ்சாயத்திற்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி நெருக்கமான தொடர்பு உள்ள நிலையில், கேரளாவில் பரவல் குறையாமல் இருப்பதால், கூடலுாரில் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  3. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  4. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  7. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  8. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  9. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  10. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...