/* */

குவாரி தண்ணீரில் தவறி விழுந்து இளைஞர் பலி

குவாரி தண்ணீரில் தவறி விழுந்து இளைஞர் பலி
X

ஆண்டிபட்டி அருகே கல்குவாரியில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்த பெயிண்டர் பலியானார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(27). பெயிண்டர். இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செயல்படாத குவாரி பகுதியில் நடந்து சென்ற போது கால் தவறி, கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் கானா விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு சத்யராஜ் பிணமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கானா விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!