/* */

குடிப்பதை தடுத்த அண்ணனை கொலை செய்த 16 வயது சிறுவன்

மதுகுடிக்க பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததை கண்டித்த அண்ணனை 16 வயது சிறுவன் கொலை செய்தார்.

HIGHLIGHTS

குடிப்பதை தடுத்த அண்ணனை கொலை செய்த 16 வயது சிறுவன்
X

பைல் படம்.

ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் வசந்த், 18. தாய், தந்தையரை இழந்த வசந்த் தனது 16 வயது தம்பியுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இருவருமே குடிக்கு அடிமையானவர்கள். வேலைக்கும் செல்வதில்லை. இந்நிலையில் இவரது வசந்தின் தம்பி தனது பாட்டியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனை வசந்த் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி, தனது அண்ணன் துாங்கும் போது, அவரது தலையில் அம்மிக்கல்லை துாக்கிப் போட்டார். அரிவாள் மனையால் கை, கால்களை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே வசந்த் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்து, மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 20 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!