/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
X

கம்ப்யூட்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி தேனியில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2021 நடைபெறவுள்ளதையொட்டி, சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி தேனி மாவட்ட கலெக்டர் / மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (5 ம் தேதி) நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,561 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,875 கட்டுப்பாட்டு கருவியும், 1,875 வாக்குப்பதிவு இயந்திரங்களும் , மற்றும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதி செய்யும் கருவியான 2,000 விவிபேட் இயந்திரங்களும் என மொத்தம் 5,750 கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போக கூடுதல் இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வின் போது, டிஆர்ஓ ரமேஷ், ஒருங்கிணைப்பு அலுவலர் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்) தியாகராஜன், பெரியகுளம் சப்கலெக்டர் சிநேகா, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?