/* */

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது இரண்டு கருங்கல் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு
X

திருவிடை மருதூர் அருகே மீட்கப்பட்ட சுவாமி சிலைகள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் கும்பகோணம் மயிலாடுதுறை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் அருகில் மரத்தின் வேர்களை பெயர்த்து எடுக்கும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த இரண்டு கருங்கல் சிலைகள் மீட்கப்பட்டது.

மூன்று அடி உயரம் உள்ள அப்பர், திருஞானசம்பந்தர் சிலைகள் அடி பீடத்துடன் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சிலைகளைப் பார்த்து பூஜை செய்து வழிபட்டனர். இதுபற்றி நரசிங்கன்பேட்டை பஞ்சாயத்து தலைவர் மாலதி சதீஷ்ராஜ் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தப் பகுதியில் மேலும் மண்ணுக்குள் சிலைகள் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் பார்க்க மேலும் தோண்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 31 May 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  4. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  5. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  6. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  7. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு