/* */

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ 20.5 கோடியில் தீவிரமாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12 தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

தண்ணீர் திறப்பதற்குள் கடைமடை பகுதி வரை செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டத்தில் தூர்வார கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை அருகே கூடலூர் வெண்ணாற்றில் பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணியை தூர் வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் பேட்டியளித்த அவர், தஞ்சை மாவட்டத்தில் 20.5 கோடி ரூபாயில் 1,169 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. பணிகள் தொடங்கி 2 நாட்கள் ஆகிறது.

ஜூன் 15-ம் தேதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 1 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!