Begin typing your search above and press return to search.
மீண்டும் பழைய நிலையா? ஊரடங்கை மீறியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை!
கொரோனா ஊரடங்கை மீறி வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை போலீசார் அடித்து விரட்டி வருகின்றனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளியில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அத்தியாவசியம் இன்றி வெளியில் வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். ஆனால் அதையும் கேட்காமல் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றி வருகின்றனர். இதனால் கொரோனா முதல் அலையின்தேபாது போலீசார் கையில் எடுத்த வியூகத்தை இப்போதும் கையில் எடுத்துள்ளனர். தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர்.