Begin typing your search above and press return to search.
தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 3 மையங்களில் 400 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து, மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், இன்று, 3 மையங்களில் 400 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சை பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 நபர்களுக்குக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும் என இரண்டு மையங்களில் 200 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 200 நபர்களுக்கு கோவாக்ஷீன் தடுப்பூசியும் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.