தஞ்சாவூர் அருகே செவிலியர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை விரல் துண்டானது
பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரல், செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(34) விவசாயக் கூலியான இவருக்கும், பிரியதர்ஷினி(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.
இந்நிலையில் கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு கடந்த 25ஆம் தேதி அரசு இராசமிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவ நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு செவிலியர்களிடம் கணேசன் சென்றுள்ளார்.
அப்போது கையில் இருந்த பேண்டை கைகள் மூலம் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது.
இதனால் குழந்தையின் துண்டான இடத்தில் தற்போது ஊசியை வைத்துள்ளனர் மருத்துவர்கள். இதுவரை மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால், செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
தஞ்இதுபோல் தவறுகள் இனிமேல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.