/* */

தஞ்சாவூர் அருகே செவிலியர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை விரல் துண்டானது

பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரல், செவிலியர்கள் அலட்சியத்தால் துண்டானது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் அருகே செவிலியர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை விரல் துண்டானது
X

தஞ்சாவூர் அருகே செவிலியரின் அலட்சியத்தால் கைவிரலை இழந்த குழந்தையின் தாய் சோகத்துடன்.

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(34) விவசாயக் கூலியான இவருக்கும், பிரியதர்ஷினி(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.

இந்நிலையில் கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு கடந்த 25ஆம் தேதி அரசு இராசமிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவ நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு செவிலியர்களிடம் கணேசன் சென்றுள்ளார்.

அப்போது கையில் இருந்த பேண்டை கைகள் மூலம் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது.

இதனால் குழந்தையின் துண்டான இடத்தில் தற்போது ஊசியை வைத்துள்ளனர் மருத்துவர்கள். இதுவரை மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிக்காததால், செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

தஞ்இதுபோல் தவறுகள் இனிமேல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 8 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது